விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ராதிகா. சங்கத்திற்காக பல திட்டங்களை அவர் கையில் வைத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
எங்களுக்கென்று சொந்த அலுவலக கட்டிடம் வேண்டும். சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலத் திட்டங்களை நிறைவேற்றவும் நிதி தேவைப்படுகிறது. இதற்காக நிதி திரட்டப்போகிறோம். அதை எந்த வகையில் செய்யலாம் என்று யோசித்து வருகிறோம்.
பிற மொழி சீரியல்கள் இங்கு டப் செய்து ஒளிபரப்புவதால் இங்குள்ள டெக்னீஷியன்களுக்கு வேலையில்லாமல் போகிறது. கேரளா, கன்னடத்தில் டப்பிங் சீரியல்கள் கிடையாது. அதுபோன்ற நிலையை இங்கு கொண்டு வரவேண்டும். இதற்காக சேனல்களுடன் பேசுவோம்.
எங்கள் சங்கம்தான் பெப்சி தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கிறது. இந்த விஷயத்தில் சினிமா வேறு தொலைக்காட்சி வேறு. பெப்சி ஸ்டிரைக் நடந்தால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஸ்டிரைக் முடிந்த உடன் படப்பிடிப்பை தொடங்கலாம். ஆனால் தொலைக்காட்சிகள் அப்படியில்லை அன்றைக்குள்ள எபிசோட்களை கொடுத்தாக வேண்டும். இடைவெளி விட முடியாது. தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். இதனை பெப்சி அமைப்புடன் பேசி சீர்படுத்துவேன் என்கிறார் ராதிகா.