டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு நடிக்கப்போனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஹேமமாலினி, ஸ்ரீதேவி, அசின், தமன்னா, இலியானா இப்படி நிறைய இருக்கிறார்கள். முதன் முறையாக ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினி தமிழ் நாட்டிலிருந்து பாலிவுட் சேனல்களுக்கு செல்கிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பாவனா அந்த நிகழ்ச்சி முடிந்ததும், கணவருடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார். இனி டி.வி.தொகுப்பாளினி வேலை வேண்டாம். நிகழ்ச்சி தொகுப்பாளராகலாம் என்று முடிவு செய்தார். அதற்கான முயற்சியில் இறங்கினார். மும்பையில் உள்ள கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்தது. காரணம் அவரது உயரமும், மும்பை பெண் போன்ற தோற்றமும்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் அணியோட தொகுப்பாளினியாக மாறியது பாவனாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. கிரிக்கெட் கேப்டன் டோனிக்கு பிடித்த தொகுப்பாளினி ஆனார். அவருடன் 13 மேடை நிகழ்ச்சி பண்ணியிருக்கார். அடுத்து சென்னை எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஷாருக்கான் மனதிலும் இடம்பிடித்தார். இந்த முறை ஹேப்பி நியூ ஈயர் புரமோசனுக்காக வந்த ஷாருக்கான் பாவானாவையே தொகுப்பாளினியாக போடச் சொன்னாராம்.
இப்படி பாலிவுட் ஸ்டார்களின் அபிமான வட்டத்துக்குள் வந்து விட்டார் பாவனா, ஹிருத்திக் ரோஷன், கேத்ரினா கைப், ஷாருக்கான் என நிறைய நண்பர்கள் அவருக்கு. இப்போது மும்பை நிகழ்ச்சிகளுக்கும் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாவனாவின் தெளிவான ஆங்கில மற்றும் இந்தி உச்சரிப்பும் அதற்கு காரணம். விரைவில் இந்தி சேனல் ஒன்றில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.