தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
''பூவரசம் பூ பூத்தாச்சு...'' என்று ''கிழக்கே போகும் ரயில்'' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. பாரதிராஜாவின் அறிமுகமான இவர் அதன்பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்தார். எப்படிப்பட்ட கேரக்டரையும் அசால்ட்டாக நடிக்கும் திறன் கொண்ட ராதிகா, இப்போது சின்னத்திரையில் நடிப்பு-தயாரிப்பு, வெள்ளித்திரையிலும் நடிப்பு-தயாரிப்பு என்று பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரிடம் நடிப்பு, தயாரிப்பு, குடும்பம் என்று எல்லாவற்றையும் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டால்... எல்லாவற்றுக்கும் நேரமும், சரியான திட்டமிடுதலும் தான் காரணம் என்று பளீச் என பதிலளித்தார் ராதிகா. மேலும் யார் யாருக்கு எந்த வேலை என்று பிரித்து கொடுத்துவிட்டு, அவரவர்கள், தங்களது கடமையை சரியாக செய்தாலே எல்லாம் சிறப்பாக அமையும் என்கிறார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் ராதிகா, சின்னத்திரை சங்கத்திற்கு ஆக்கபூர்வமான செயல்களை செய்ய இருப்பதாகவும், அதில் ஒன்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டடம் கட்ட இருப்பதாகவும் தெரிவித்தார். விரைவில் அதுப்பற்றிய முறைப்படி அறிவிப்பை வெளியிட இருக்கிறார் ராதிகா.