தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். அந்த வகையில் 2014-2017ம் ஆண்டுக்கான தேர்தல் அக்., 12ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் நடிகை நளினி, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், சிவன் சீனிவாசன் ஆகியோர் தனித்தனி அணி அமைத்து போட்டியிட்டனர். வாக்கு பதிவு முடிந்ததும் முக்கிய நிர்வாகிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் நடிகை நளினி தலைமையிலான அணியினர் பெருவாரியான வெற்றிகளை பெற்றனர். தலைவராக நளினியும், பொதுச் செயலாளராக நளினி அணியை சேர்ந்த பூ விலங்கு மோகனும், பொருளாளராக நளினி அணியைச் சேர்ந்த வி.டி.தினகரனும் வெற்றி பெற்றனர். அதன்படி தலைவராக நடிகை நளினி இன்று(அக்., 15ம் தேதி) முறைப்படி பதவியேற்று கொண்டனர். அவருடன் சேர்ந்து பூவிலங்கு மோகன் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளும் பதவியேற்று கொண்டனர்.