ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சின்னத்திரைக்கு பேட்டி அளிப்பதோடு சரி. நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னணி வகிக்கும் சேனல் ஒன்று அவருக்கு பெருந் தொகை தருவதாக கூறியும் நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்க மறுத்தார்.
அவர் தற்போது மலையாள சேனல் ஒன்று நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்ற ஒப்புக் கொண்டிருக்கிறார். பேண்ட் இசை சம்பந்தமான இசை நிகழ்ச்சி. இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 பேண்டு குழுக்கள் இடையேயான போட்டிக்கு நடுவராக ஆண்ட்ரியா பணியாற்றுகிறார். அவருடன் டிரம்ஸ் சிவமணி, மலையாள இசை அமைப்பாளர் ஜார்ஜ் பீட்டர், தீபக் தேவ் ஆகியோரும் நடுவர்களாக இருக்கிறார்கள்.