டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சின்னத்திரைக்கு பேட்டி அளிப்பதோடு சரி. நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னணி வகிக்கும் சேனல் ஒன்று அவருக்கு பெருந் தொகை தருவதாக கூறியும் நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்க மறுத்தார்.
அவர் தற்போது மலையாள சேனல் ஒன்று நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்ற ஒப்புக் கொண்டிருக்கிறார். பேண்ட் இசை சம்பந்தமான இசை நிகழ்ச்சி. இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 பேண்டு குழுக்கள் இடையேயான போட்டிக்கு நடுவராக ஆண்ட்ரியா பணியாற்றுகிறார். அவருடன் டிரம்ஸ் சிவமணி, மலையாள இசை அமைப்பாளர் ஜார்ஜ் பீட்டர், தீபக் தேவ் ஆகியோரும் நடுவர்களாக இருக்கிறார்கள்.