ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா. அதன் பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். மெட்டிஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்பட பல சீரியல்களில் நடித்தார். மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். அக்கா, அண்ணி வேடங்கள்தான் கிடைத்தது. இதனால் வெறுத்துப்போனவர் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி வாணி ராணியிலும், மகாபாரதத்திலும் நடித்து வருகிறார்.
இதுவரை நடிகையாக இருந்த நீலிமா தற்போது அழகிய சினேகிதி என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாகியிருக்கிறார். இது பெண்களுக்கான நிகழ்ச்சி, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வந்து அழகிய சினேகிதியாக வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.
"தொகுப்பாளினியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. பல வாய்ப்புகள் வந்தபோதும் எனக்குள் இருந்த தயக்கத்தால் ஏற்கவில்லை. இப்போது துணிச்சலுடன் களம் இறங்கிவிட்டேன். இதை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் நீலிமா.