ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
வேந்தர் தொலைக்காட்சியில் இருவர், ரெட்டவாலு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி கிருத்திகா. இவர் ஒரு நகை வடிவமைப்பாளர். விரைவில் அது தொடர்பான நிறுவனம் ஒன்றையும் தொடங்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்திலிருந்தே தொகுப்பாளினியாக வேண்டும் என்பதுதான் கனவு. ஒரு நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இப்போது இரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்.
எங்கள் முன்னோர்கள் நகை வடிவமைப்பில் நிபுணர்களாக இருந்தவர்கள். எங்கள் தாத்தா நகை வடிவமைக்கும்போது நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அந்த ஆர்வம் எனக்குள் இருந்ததால் நகை வடிவமைப்பும், எம்ராய்டரிங்கும் முறைப்படி கற்றிருக்கிறேன். நிறைய டிசைன்கள் வடிவமைத்து வைத்திருக்கிறேன். அதை வைத்து ஒரு பெரிய பொடீக் திறக்க இருக்கிறேன் என்கிறார் கிருத்திகா.