தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கவிஞர் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து திரைப்பட பாடலாசிரியராகவும், எழுத்தாளராகவும், சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
தற்போது கபிலன் சின்னத் திரை நிகழ்ச்சி தயாரிப்பை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதியுள்ளார். மெய்நிகரி என்பது நாவலின் தலைப்பு. இது கபிலன் எழுதியுள்ள மூன்றாவது நாவலாகும்.
ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோக்கள் பற்றி இந்த நாவலில் சொல்லியிருக்கிறார். நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர், இயக்குனர், நிகழ்ச்சி நடக்கும் விதம், அங்கு நடக்கும் சில திரைமறை ரகசியங்கள் என எல்லாவற்றையும் இந்த நாவலில் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். ஒரு படத் தொகுப்பாளரின் பார்வையில் இந்த நாவலின் கதை சொல்லப்படுகிறது. வருகிற செப்படம்பர் மாதம் கிழக்கு பதிப்பகம் இந்த நாவலை வெளியிடுகிறது.