இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதாபாசு, சினிமாவில் வருமானம் இல்லாததால் தான் அந்த தொழிலுக்கு தள்ளப்பட்டதாக கூறியிருந்தார். அதற்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது, சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் டி.வியில் நடிக்கலாம். இல்லையேல் வேறு ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு பாலியல் தொழிலுக்கு சென்றேன் என்று ஸ்வேதாபாசு கூறுவது தவறானது என்று தனது கருத்தை சொல்லியிருந்தார்.
ஆனால், இப்போது சீரியல்களில் நடித்து வரும் சாக்ஷி என்ற நடிகை ஸ்வேதாபாசுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், ஸ்வேதாபாசு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டபோது அவரது புகைப்படத்தை மட்டுமே போலீசார் வெளியிட்டனர். ஆனால், அவருடன் இருந்த அந்த தொழிலதிபரது பெயரையோ, போட்டோவையோ இதுவரை வெளியிடவில்லை. மேலும், ஸ்வேதாபாசுவை காப்பாகத்தில் வைத்திருப்பதாக கூறிய போலீசார், அவரது அம்மாவைகூட பார்ப்பதற்கு அனுமதிக்காதது வேதனையானது.
மேலும், ஸ்வேதாபாசுவை ஒரு கிரிமினல் போன்று களங்கப்படுத்துகிறார்கள். ஒரு கொலைகாரனுக்கு கொடுக்கும் உரிமையைகூட ஸ்வேதாவுக்கு கொடுக்கவில்லை என்றும் காவல்துறைக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.