டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அரை மணி நேர செய்தியில் ஒரு நமிட வானிலை அறிவிப்பாளராக அறிமுகமானவர் மோனிகா. அவரின் குழந்தை தனமான முகமும், மழலை உச்சரிப்பும் ஒரு காலத்தில் தனக்கும் இப்படி ஒரு குழந்தை இருக்ககூடாது என்று பெற்றோர்களை ஏங்க வைத்தது. அதன் பிறகு மற்ற நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளியான மோனிகா, திரைப்பட விழாக்களுக்கும் தொகுப்பாளினி ஆனார். குடும்ப பாங்கான தோற்றத்தால் தொகுப்பாளினி வாய்ப்புகள் குறைந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.
நடிப்பதில்லை என்ற பாலிசி வைத்திருந்த மோனிகா வேறு வழியில்லாமல் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். காமெடி காலனி, செந்தூரபூவே தொடர்களில் நடித்தார். அதன் பிறகு உதவி இயக்குனர் ஹரிராவை திருணம் செய்து கொண்டு செட்டிலானர். சில வருடங்கள் சின்னத்திரைக்கு இடைவெளி விட்டவர். சமீப காலமாக சினிமா விழாக்களை தொகுத்து வழங்கி வந்தார். இப்போது தெய்வம் தந்த வீடு தொடர் மூலம் தனது நடிப்பு பயணத்தையும் தொடங்கி விட்டார்.
புதிதாக தொடங்கப்பட்ட சேனலில் சா பூ த்ரீ என்ற குழந்தைகள் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக மீண்டும் ஆகியிருக்கிறார். "நான் சீரியலில் நடித்தாலும் என்னை எல்லோரும் தொகுப்பாளியாகத்தான் பார்க்கிறார்கள். அதில் எனக்கு சந்தோஷம். தொகுப்பாளினியாக இருப்பது அந்த நிகழ்ச்சியின் ராணியாக இருப்பது போன்ற சுகத்தை தரும். நானும் ஒரு தாயாகிவிட்ட சூழ்நிலையில் குழந்தைகள் நிகழ்ச்சி நடத்த கிடைத்த வாய்ப்பு இறைவன் கொடுத்தது. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொகுப்பாளினி ஆகியிருப்பது இழந்தை மீண்டும் பெற்றது மாதிரி இருக்கிறது" என்கிறார் மோனிகா.