பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அள்ளித்தந்த வானம், ஜெயம், ரமணா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ப்ரணிதா. மறந்தேன் மெய்மறந்தேன் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். கத்திகப்பல், பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00, இளம்புயல் படங்களில் நடித்தார். சினிமா அவருக்கு சரிப்பட்டு வரவில்லை டி.வி பக்கம் வந்துவிட்டார். கல்யாணி என்ற பெயரில் பீச் கேர்ள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சில சீரியல்களிலும் நடித்தார்.
அதன் பின்னர் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில காலம் சின்னத்திரையை விட்டு விலகி இருந்த கல்யாணி இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் பீச் கேர்ள் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார்.
"பீச் கேர்ள் என் வாழ்வின் ஒரு அங்கம். புதிய நிகழ்ச்சிக்கான 20 எபிசோட்கள் படமாக்கப்பட்டு விட்டது. முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் மீண்டும் தொடங்குமாறு ரசிகர்களும், விளம்பரதாரர்களும் வற்புறுத்த இப்போது மீண்டும் தொடங்கி விட்டோம். இந்த முறை என்னுடன் ரெபேக்காவும் இணைந்து தொகுத்து வழங்குகிறார். திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக செல்கிறது" என்கிறார் கல்யாணி.