அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சினிமாவில் தன் கேரியரை ஆரம்பித்த ஜெனிப்பிரியா பிறகு சின்னத்திரையில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சீரியல்களிலும் நடித்தார். தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார். தொகுப்பாளினி வேலைக்கும் முழுக்கு போடுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: துள்ளல் படத்தில் டைட்டில் பாட்டுக்கு ஆடியதுதான் சினிமாவின் ஆரம்பம். நீயே என் காதலி படத்தில் சின்னி ஜெயந்துடன் நடித்தேன். புதிய பார்வை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தேன். நடிச்ச படம் எதுவும் பெருசா போகலை. சின்னத்திரைக்கு வந்தேன். அதன் பிறகும் சினிமா வாய்ப்புகள் வந்தது. எல்லாமே கிளாமர் கேரக்டர்கள் அதனால மறுத்துட்டேன். சின்னத்திரையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்ததால் சினிமாவில் நடிக்க முடியவில்லை.
அதனால் இப்போது சின்னத்திரையிலிருந்து முழுவதுமாக வெளியே வந்து சினிமாவில் நடிக்க முடிவு பண்ணியிருக்கேன். அதிமேதாவிகள், உத்தம திருடன் படங்களில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறேன். வாலு படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்கிறேன். காலை 9.30 முதல் மாலை 4.30 மணிவரை என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறேன். இன்னும் நிறைய வாய்ப்புகள் வருகிறது. இனி முழு கவனமும் சினிமாவில்தான். என்கிறார் ஜெனிப்ரியா.