ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரை உலகில் மைனா என்றால்தான் நந்தினியை தெரியும். சரவணன் மீனாட்சி தொடரில் இவரது காமெடி அட்டகாசங்களை பார்த்து ரேவதி என்று இருந்த கேரக்டரின் பெயரை மைனா என்றே மாற்றிவிட்டார்கள். யூனிட்டுக்கு வெளியேயும் மைனா என்றே அழைக்கிறார்கள். எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் நந்தினி. தன்னை பற்றியும் வெளிப்படையாக பேசுகிறார்...
மதுரையில ஒரு குடிசை வீட்டில் பொறந்தவள்தான் நான். பள்ளிக்கூடம் படிச்சேன். அப்புறம் குடும்ப பாரம் சுமக்க வேண்டியது வந்ததால் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். பார்க்க கொஞ்சம் சுமாராக இருக்கிறதால உள்ளூர் சேனல்ல வேலை கிடைச்சுது. காம்பியரிங் பண்ணிக்கிட்டிருந்தேன். அதை பார்த்துட்டுதான் பாண்டிராஜ் சார் வம்சம் படத்துல கஞ்சா கருப்புக்கு ஜோடியா நடிக்க வச்சார். அப்புறம் கேடி பில்லா கில்லாடி ரங்கால சூரிக்கு ஜோடியாக நடிச்சேன். காமெடி நடிகைங்ற முத்திரை கிடைச்சுது. அதைவச்சு சீரியலுக்கு வந்தேன். செல்லமே, அழகி சீரியல்ல சின்ன சின்ன ரோல்கள் பண்ணினேன். சரவணன் மீனாட்சிதான் என்னை முழுசா அடையாளம் காட்டுச்சு.
இப்போ வீட்டுல கல்யாண பேச்சை ஆரம்பிச்சிருக்காங்க. லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிக்கணுங்றதுல உறுதியா இருக்கேன். அதுக்கு கொஞ்சம நாள் ஆகும். காரணம் இப்போது வாடகை வீட்டில்தான் இருக்கோம். சொந்தமாக ஒரு வீடு வாங்கணும், இப்பவும் அப்பா, அம்மா வேலைக்கு போயிட்டிருக்காங்க, அவுங்களுக்கு ஓய்வு கொடுக்கணும். தம்பிய நல்ல படிப்பு படிக்க வைக்கணும். இந்த குடும்ப கடமைகளை முடிச்சிட்டுதான் எனக்கென்று ஒரு குடும்பத்தை அமைச்சிக்கணும். என்கிறார் நந்தினி என்கிற மைனா.