ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மக்கள் தொலைக்காட்சியில் 8 வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்தவர் ஆர்த்தி. இப்போது அங்கிருந்து விலகி இன்னொரு சேனலில் காலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். தூய தமிழ், பட்டுப்புடவை என்று மக்கள் தொலைக்காட்சியில் வலம் வந்தவர் இப்போது மார்டன் டிரஸ்சில் ஆங்கிலம் கலந்து பேசி அசத்தி வருகிறார். விரைவில் ஆர்த்திக்கு திருமணம் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி.
இதுபற்றி அவர் கூறியதாவது: 8 வருடம் ஒரே டி.வியில் வேலை பார்த்தது பெரிய அதிசயம்தான். ஒரே இடத்தில் போரடித்து விட்டதால்தான் விலகினேன், வேறெதுவும் காரணம் இல்லை. காலேஜ் படிக்கும்போது கலை நிகழ்ச்சிகளில் நான்தான் ஸ்டார். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக சென்றவளுக்கு கிடைத்தது தொகுப்பாளினி வேலை. அதையும் செய்துவிட்டேன். இடையில் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தது. அந்த ஏரியா எனக்கு செட்டாகுதுன்னு சொல்லி மறுத்திட்டேன்.
வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் எல்லோருக்கும் கல்யாண சாப்பாடு போடப்போகிறேன். எனக்கு கூட்டு குடும்பம்தான் பிடிக்கும். அந்த குடும்பத்தில் ஒரு அங்கமாக மாற விரும்புகிற மாப்பிள்ளையாக பார்க்கிறார்கள். நான் கொஞ்சம் லொட லொடன்னு பேசுற பொண்ணு அதை சகித்துக் கொள்கிறவராக இருக்கணும். இல்ல பதிலுக்கு பதில் பேசுறவரா இருக்கணும். பார்ப்போம் எப்படிப்பட்டவர் வருகிறார் என்று என்கிறார் ஆர்த்தி.