ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவர் இப்போது தெலுங்கு தொலைக்காட்சியில் மேலோ எவரு கோடீஸ்வரலுடு (உங்களில் யார் கோடீஸ்வரர்) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் நிகழ்ச்சி இது. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் சாலையில் போக்குவரத்து குறைந்து விடுவதாக சொல்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மீது மோகம் கொண்டு திரிகிறார்கள் ஆந்திர மக்கள்.
"இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இதன் மூலம் சாதாரண மக்கள் மனதிலும் நான் இடம் பிடித்திருக்கிறேன். இந்த அளவுக்கு நிகழ்ச்சியை உயர்த்தி பிடித்த மக்களுக்கு என் நன்றி" என்கிறார் நாகர்ஜுனா. நிகழ்ச்சியின் விளம்பரக் கட்டணம். கோடியை தாண்டியிருக்கிறதாம்.