டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சொந்த பந்தம், உயிர்மை, சித்திரம் பேசுதடி தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர் அஸ்ருதா. தெகிடி படத்தில் ஜனனி அய்யரின் தோழியாகவும், திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் ஜெய்யின் முறைப்பெண்ணாகவும் நடித்தார். தற்போது கடல் தந்த காவியம் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகிவிட்டார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்து வரும் தொடர்களில் நான் ஹீரோயினாக இல்லாவிட்டாலும் எனது கேரக்டர் முக்கியமானதாக இருக்கிறது. சீரியல்களில் எனது நடிப்பை பார்த்துதான் சினிமா வாய்ப்புகள் வந்தது. இப்போது கடல் தந்த காவியம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். வடக்கன்குளம் மேரி மாதாவின் அற்புதங்களை சொல்லும் பக்திப் படம். இந்த படத்தில் நான் ஹீரோயினாக அறிமுகமானது நான் செய்த பாக்கியம். என்கிறார் அஸ்ருதா.