தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மன்னன் மகள் தொடரில் விஷாலி, தாயம்மா என்ற இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் மதுமிதா. இந்த தொடருக்காக தீவிரமாக வாள் சண்டை கற்று வருகிறார். பிரியாணி படத்தில் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த பிசியான ஷெட்யூலிலும் ஈமுகோழி பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
இதுபற்றி மதுமிதா கூறியதாவது: ஷியானா என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். நானும் என் கணவர் சிவபாலாஜியும் இணைந்து இதனை தொடங்கி இருக்கிறோம். இது ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் அல்ல. ஈமு கோழியில் இருந்து சில பொருட்களை தயாரிக்கும் நிறுவனம். இப்போது ஐதராபாத்தில் ஆரம்பித்திருக்கிறோம் சக்சஸ் ஆனால் சென்னையில் தொடங்குவோம்.
விரைவில் என் கணவர் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். தெலுங்கு படம் ஒன்றை இருவரும் சேர்ந்து தயாரிக்க இருக்கிறோம். எங்கள் வீடு ஐதராபாத்திலும், மாமியார் வீடு சென்னையிலும் இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லாமல் தங்கியிருந்து நடிக்கிறேன். மன்னன் மகள் சீரியலில் இரண்டு வேடத்தில் நடிப்பதால் அதற்கே நேரம் சரியா இருக்கிறது. அதனால் வேறு சீரியல்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. என்கிறார் மதுமிதா.