ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்ற ஜோடி செந்தில், ஸ்ரீஜா. இந்த ஜோடிபோன்று சின்னத்திரையில் அதற்கு முன்பும், பிறகும் எந்த ஜோடியும் பேசப்படவில்லை. சீரியலில் காதலித்த இருவரும் சீரியசாகவும் காதலிக்க, சீரியலின் டிஆர்பி எகிறியது. அதன் பிறகு செந்தில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஸ்ரீஜா வேறு தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இடையில் இருவரும் பிரிந்து விட்டனர் என்றெல்லாம் செய்திகள் வந்தது. திடீரென்று ஒரு நாள் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்திலிருந்தே இருவரும் தங்கள் காதலை மறுத்து வந்தனர். அதுபற்றி இப்போது இருவருமே நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளனர்.
காதல், கல்யாணம் பற்றி செந்தில் கூறியிருப்பதாவது: சரவணன் மீனாட்சியில் நடித்த போது இருவரும் காதலிக்கவே இல்லை. சீரியலில் நெருக்கமாக நடிப்பதை பார்த்து விட்டு மற்றவர்கள்தான் அப்படி நினைத்தார்கள். "நீங்க ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்ககூடாது?"ன்னு பார்க்கிறவங்கெல்லாம் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்புறந்தான் ஒரு நாள் ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து யோசிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னன்னு நினைச்சோம். அதுக்கான நேரம் வந்ததும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணம் வரைக்கும் சத்தியமா ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கவே இல்லை. இப்பதான் காதலிக்க ஆரம்பிச்சிருக்கோம்.
ஆனால் ஸ்ரீஜாவுக்கு என் மீது காதல் வந்திருக்கு அதுக்கு காரணம் அவளது பெரியப்பாவின் மரணம். ஸ்ரீஜா சரவணன் மீனாட்சியில நடிக்கிறப்போ அவளுக்கு துணையா இருந்தது அவளது பெரியப்பா. ஒரு நாள் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுலேயே இறந்துட்டார். ஸ்ரீஜாவுக்கு சென்னையில யாரையும் தெரியாது. பெரியப்பாவை கேரளாவுக்கு எடுத்துட்டு போகணும். அவுங்களை தனியாவும் அனுப்ப முடியாது. பெரியப்பா உடலை எடுத்துக்கிட்டு 12 மணி நேரம் அவுங்களோட டிராவல் பண்ணினேன். அப்போது நான் நடந்துகிட்ட விதம், நான் செய்த சின்ன, சின்ன உதவிகள் அவுங்க மனசுல ஆழமாக பதிஞ்சிருக்கு. அதுதான் இப்போ கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கு என்கிறார் செந்தில்.