தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாளைய இயக்குனர், மானாட மயிலாட நிகழ்ச்சிகளை ஆரம்பம் முதல் தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர் கீர்த்தி. நிகழ்ச்சியை போலவே கீர்த்திக்கும் தனி மவுசு உண்டு. குஷ்புவின் ஜாக்கெட்டிற்கு பிறகு கீர்த்தி அணிந்து வரும் ஜாக்கெட்தான் பிரபலம். அவரது விதவிதமான உடைகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. அதற்கு காரணம் சொல்கிறார் கீர்த்தி.
" எனது உடைகளை நானே டிசைன் செய்து கொள்கிறேன். டஜன் கணக்கில் புதிய ஆடைகளை வாங்கி வைத்துக் கொண்டு அதை டிசைன் செய்வதுதான் என் வேலை. நூற்றுக் கணக்கில் கலெக்ஷன் வைத்திருக்கிறேன். சிங்கப்பூரில் நடக்க இருக்கும் மானாட மயிலாட இறுதிப் போட்டிக்கென்று பிரத்யேகமாக உடைகளை டிசைன் செய்து வைத்திருக்கிறேன். அவற்றைப் போட்டு அசத்தப்போகிறேன்.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இப்போது இயக்குனர்களாகி விட்டனர். பலர் உங்கள் ராசியால்தான் இயக்குனர் ஆனோம் என்றார்கள். சிலர் நீங்க என் படத்துலா நடிங்களேன்னு கூப்பிட்டாங்க ரெண்டுமே சந்தோஷமாக இருந்தது என்கிறார் கீர்த்தி.