600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சின்னத்திரை நடிகர் சங்கம் நலிந்த சின்னத்திரை கலைஞர்களின் நல்வாழ்விற்கு நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்துகிறது. ஹெல்ப்பிங் ஆர்ட்ஸ் பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து நடத்தும் இந்த போட்டி வருகிற ஆகஸ்ட் 17ந் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் சின்னத்திரை நடிகர்கள் ஒரு அணியாகவும், பெரிய திரை நட்சத்திரங்கள் ஒரு அணியாகவும் மோதுகிறார்கள்.
இதற்கான அணிகள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் பெரிய திரை நட்சத்திரங்களுக்கு நீல நிற உடையும், சின்னத்திரை நடிகர்களுக்கு சிகப்பு நிற உடையும் விளையாட்டு சீருடையாக அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் எம்.ராஜேந்திரன், செயலாளர் ராஜ்காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரிய திரை அணியில் வெங்கட்பிரபு, ஷாம், பரத், எஸ்.பி.பி.சரண், சாந்தனு, ப்ருத்வி, நிதின் சத்யா, மகேந்திரன், உதய், சஞ்சீவ், அனூப், ஆதவ், விஷ்ணுவர்த்தன், அசோக் ஆகியேர் விளையாடுகிறார்கள்.