எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
அமராவதி படத்தில் அஜீத்துடன் நடித்தவர் சங்கவி, அதன் பிறகு விஜய்யுடன் நான்கு படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட சங்கவி, இப்போது ஆஹா என்ன பொருத்தம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
தனது சின்னத்திரை அனுபவம் பற்றி இப்படி கூறுகிறார்: சினிமாவில் நிறைய சாதித்து விட்டேன். இத்தனை வருடத்துக்கு பிறகும் செலிபிரிட்டியாக இருக்கிறதே பெரிய விஷயம். பெரிய ஹீரோக்களுடன் நடித்து விட்டு சின்னத்திரைக்கு வந்தது பற்றி நான் கவலைப்படவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் சினிமாவை விட சின்னத்திரையில் சந்தோஷமாகவே இருக்கிறேன். எங்கே வாய்ப்பு கிடைக்கிறதோ அதை பயன்படுத்திக்கணுங்றது என்னோட பாலிசி. அதைத்தான் செய்கிறேன். சினிமாவில் நடிகையாகத்தான் இருந்தேன். சின்னத்திரையில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று அவுங்க வீட்டு பொண்ணாயிட்டேன். இந்த அனுபவம் புதுசா இருக்கு.
சினிமாவுல டைரக்டர் கொடுக்கிற வசனத்தை மனப்பாடம் பண்ணி பேசிடலாம் அது ரொம்ப எளிது. ஆனால் டி.வி ஷோல அப்படி பேச முடியாது. எதிர்ல இருக்கிறவர் என்ன பேசுவார்னு நமக்குத் தெரியாது. அவுங்க எது பேசினாலும் அதுக்கு பதில் பேசி நாம நிக்கணும். இது சவாலான விஷயம் டைமிங் சென்ஸ் இல்லேன்னா டி.வியில பேட்டிகூட கொடுக்க முடியாது.
சினிமால மீண்டும் நடிக்கிற ஐடியா எதுவும் இல்லை. நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம்தான். ஆனால் இப்போ உள்ள டைரக்டர்கள் புதுப்புது ஹீரோயின்களைத்தானே தேடுறாங்க. என்கிறார் சங்கவி.