‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகி வரும் ஆன்மீக, மர்ம தொடர் அதே கண்கள். நிமோ புரொடக்ஷன் சார்பில் கே.பாலு தயாரிக்கிறார். மூன்று குடும்பங்களுக்குள் நடக்கும் மர்மமான விஷயங்களை காட்சிப் படுத்தி திரைப்படங்களுக்கு நிகரான விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. மகேஸ்வரி, பாரதி, பரத்கல்யாண், மித்ரன், சிவன் சீனிவாசன், சிவகவிதா, சாய்ராம், நேசன், வசந்த், வனஜா, தீபா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
தற்போது இதன் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி மாவட்டம் மாத்தாண்டத்தில் நடந்து வருகிறது. தொடர்குறித்து தயாரிப்பாளர் கே.பாலு கூறியதாவது:
இந்த தொடருக்கு நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஆதரவு பெருகி உள்ளது. 50 எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி இருக்கும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கும் உயர்ந்திருக்கிறது. 300 எபிசோடுகளுக்குத்தான் திட்டமிட்டிருந்தோம். சேனல் நிர்வாகம் ஆயிரம் எபிசோடுகள் வரை கொண்டு வாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தின் கதை இலாகா அதற்கேற்றார்போல கதையில் பல டுவிடஸ்டுகளை வைத்து ஸ்கரிப்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.