டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளாவைச் சேர்ந்த நீனு கார்த்திகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஒரு சில படங்களில் நடித்த நிலையில் புதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. உடனே சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார், வைதேகி, முத்தாரம் தொடர்கள் மூலம் புகழ் பெற்றார். இப்போது புதிய சீரில்களில் நடிக்க பேசி வருகிறார். கிடைத்த சின்ன கேப்பில் கேரளாவில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரைத் தேடி சில மலையாள சீரியல் வாய்ப்புகள் வந்ததை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது "தமிழில் இரண்டு சீரியல்கள் கதை கேட்டு ஓகே சொல்லியிருக்கிறேன். தேர்தல் பரபரப்பு அடங்கியதும் முறையான அறிவிப்பு வரும். நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன். சில சினிமா வாய்ப்புகள் வந்தது. மலையாள சீரியல் வாய்ப்புகளும் வந்தது. என்னை வாழ வைத்தது தமிழ் சீரியல்கள்தான். அதற்குத்தான் முக்கியத்தும் தருவேன்" என்கிறார் நீனு கார்த்திகா.