'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததினால் மூன்றாண்டு தண்டனை பெற்ற வடிவேலு ஆளும்கட்சிக்கு தூதுவிட்டுக் கொண்டே இருந்தார். அங்கிருந்து பாசிட்டிவ்வான சிக்னல் வராதநிலையில், தன்னையே நொந்தபடி புலம்பிக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல, தற்போது அவர் கதாநாயகனாக நடித்து வரும் தெனாலிராமன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் கடைசிநேரத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடுவார்களோ என்ற பயத்திலும் இருந்தார். அவரது பயத்தை அதிகரிப்பதுபோலவே தொடர்ந்து பல சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இப்படியான சூழலில், கடைசிமுயற்சியாக ஒரு கல்லை வீசிப்பார்ப்போம் என்று தன் மானேஜர் முத்தையா என்பவர் மூலம் ஒரு முயற்சியை செய்தார்.
அதாவது ஆளும்கட்சி சேனலுக்கு தன் மானேஜரை அனுப்பி, தமிழ்ப்புத்தாண்டு அன்று ஒளிபரப்பு செய்யத்தக்க வகையில் சிறப்பு நிகழ்ச்சி செய்ய ஆர்வம் இருப்பதாக, ஆளும்கட்சி சேனலில் உள்ள முக்கிய நிர்வாகியிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். வடிவேலுவின் கோரிக்கை மேலிடத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து க்ரீன் சிக்னல் வர, வடிவேலுவை வைத்து தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இதற்கிடையில், தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு வடிவேலுவை அணுகியது கலைஞர் தொலைக்காட்சி. வடிவேலு கடைசிவரை போனை அட்டெண்ட் பண்ணவே இல்லை. அதுக்குள்ளே நன்றி கெட்ட மனுஷனாயிட்டாரே என்ற வடிவேலு மீது கோபத்தில் இருக்கிறதாம் கலைஞர் டிவி வட்டாராம்.