ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளியான இருந்து சினிமாவுக்கு வந்த பாவனா, ரம்யா நம்பீசன், மீரா நந்தன் வரிசையில் தெலுங்கு சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்து தமிழ் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஸ்ரீமுகி. ராட்டினம் படத்தை இயக்கிய தங்கசாமி சொந்தமாக தயாரித்து இயக்கும் எட்டுதிக்கும் மதயானைதான் ஸ்ரீமுகி நடிக்கும் முதல் படம். அடுத்து இரண்டு படங்களில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார்.
"தமிழ் நாட்டில் சின்னத்திரை கலைஞர்கள் எளிதாக பெரிய திரைக்கு வந்து விடுகிறார்கள். ஆந்திராவில் அது சாத்தியம் இல்லை அங்கு சின்னத்திரை கலைஞர்களையும், பெரிய திரை கலைஞர்களையும் பிரித்துதான் பார்க்கிறார்கள். அதனால்தான் தமிழில் வாய்ப்பு கிடைத்ததும் உடனே ஓகே சொல்லிவிட்டேன். தமிழ் நன்றாக கற்றுக் கொண்டுவிட்டேன். இனி தொடர்ந்து சினிமாவில்தான் நடிப்பேன், சின்னத்திரைக்கு திரும்பும் யோசனை இல்லை என்கிறார் ஸ்ரீமுகி.