டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் இர்பான். அதற்கு பிறகு பட்டாளம் படத்தில் பள்ளி மாணவராக நடித்தார். எப்படி மனசுக்குள் வந்தாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் ஓடவில்லை. அதற்கு பிறகு சுண்டாட்டம் படத்தில் நடித்தார். அது சுமாராக ஓடினாலும் சினிமாவில் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார். தற்போது சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பாகத்தில் சரவணனாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவரது பெரிய திரை கனவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்வீச்சு என்ற படத்தில் நடித்தார். மலேசியாவில் தயாரான இந்தப் படம் மலேசியாவில் சுமாராக ஓடியது. தமிழ்நாட்டில் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
தற்போது பொங்கி எழு மனோகரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சும்மா நச்சுனு இருக்கு பட ஹீரோயின் அர்ச்சனா நடித்து வருகிறார். இது அம்மா-மகன் செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் கதை. இந்த படம் தனக்கு திருப்புமுனை தந்தால் சின்னத்திரையிலிருந்து விலகிவிடும் மனநிலையில் இருக்கிறார் இர்பான்.