'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
''சித்திரம் பேசுதடி'' தொடரில் குந்தவையாக நடித்து புகழ் பெற்றவர் ரம்யா. பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்தில் நடித்த பிறகு சினிமாவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். வேறு சில சீரியல்களில் நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்து விட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: தற்போது வெள்ளை குதிரையில் ராஜகுமாரன் உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறேன். எல்லா படத்திலுமே கதைக்கு முக்கியமான திருப்புமுனை கேரக்டர்கள். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருவதால் சீரியல் வாய்ப்புகளை தவிர்த்து வருகிறேன். சித்திரம் பேசுதடி எனக்கு அடையாளம் கொடுத்த தொடர் என்பதால், அதில் தொடர்ந்து நடித்து வருகிறேன். படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி, திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்த மீனாட்சி கேரக்டர் மாதிரி பயங்கர வில்லி கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் ரம்யா.