'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியில் ஹிருத்திக் ரோஷன் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி படம் ஜோதா அக்பர். அக்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் வெளிவந்தது. இப்போது அதே ஜோதா அக்பர் என்ற பெயரில் மெகா சீரியல் ஒன்றும் உருவாகியுள்ளது. சினிமாவை காட்டிலும், டி.வி. சீரியல் இன்னும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. பிரபல இந்தி தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தான் இந்த தொடரை தயாரிக்கிறார். அக்பரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இந்த தொடர் உருவாகியுள்ளது. சமீபத்தில் தான் இந்த தொடரை அறிமுகம் செய்து வைத்தார் ஏக்தா கபூர். தற்போது இந்தியில், ஜீ டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் இத்தொடரை விரைவில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து ஒளிப்பரப்ப இருக்கிறார்கள்.