ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"காதலே நிம்மதி" படத்தில் அறிமுகமான சங்கீதா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்தார். தமிழில் சில படங்களில் நடித்தாலும், "பிதாமகன்" படத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்ததுதான் அவருக்கு பெரிய ரீ-என்ட்ரியை கொடுத்தது. அதன் பிறகு "உயிர்" படத்தில் கொழுந்தனை விரும்பும் அண்ணி கேரக்டரிலும், "தனம்" படத்தில் பாலியல் தொழிலாளி கேரக்டரிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2009ம் ஆண்டு தன்னை விட வயது குறைவான பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாய். தமிழில் இவர் நடித்த "புத்திரன்", தெலுங்கில் "துர்கா" ஆகிய படங்கள் வெளிவரவேண்டியது இருக்கிறது.
குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்ட நிலையில் சங்கீதா இப்போது சின்னத்திரையின் பக்கம் வந்திருக்கிறார். "ஜீ தெலுங்கு" தொலைக்காட்சி நடத்தும் "பிந்தாஸ்" என்ற தெலுங்கு கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார். விரைவில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறியிருக்கிறார்.