தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டிவியில் இதுவரை மாலை வேளையில் ஒளிபரப்பாகி வந்த சிவம் தொடர், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தத் தொடர், இந்தியிலும் நம்பர் ஒன் தொடராக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தக்ஷராஜனின் மகளான சதி தன்னையும் அறியாமல் சிவனிடம் மனதை பறிகொடுக்கிறாள். தீவிர விஷ்ணு பக்தரான தக்ஷன் தன் மகள் சிவனை விரும்புவதை அறவே வெறுக்கிறார். அதனால் மகளுக்கு வேறொருவருடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். கோர முகமுடைய ஒரு வாலிபனை மகளுக்கு மணாளனாக தீர்மானிக்கிறார். சதியின் தாய் பிரசுதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அந்த வாலிபனை அழகாக மாற்றுவதற்காக ஜித்தன் என்ற கலை நிபுணரை அரண்மனைக்கு அழைத்து வருகிறார். சிவன் ஜித்தன் ரூபத்தில் வந்து சதியை அந்த திருமணத்தில் இருந்து மீட்கிறார். சிவனை அவள் மணம் புரிந்தபின் தக்ஷராஜன் மேற்கொள்ளும் அதிரடி முயற்சிகள் என்ன என்பதை வரும் வாரங்களில் காணலாம்.