எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
விஜய் டிவியில் இதுவரை மாலை வேளையில் ஒளிபரப்பாகி வந்த சிவம் தொடர், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தத் தொடர், இந்தியிலும் நம்பர் ஒன் தொடராக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தக்ஷராஜனின் மகளான சதி தன்னையும் அறியாமல் சிவனிடம் மனதை பறிகொடுக்கிறாள். தீவிர விஷ்ணு பக்தரான தக்ஷன் தன் மகள் சிவனை விரும்புவதை அறவே வெறுக்கிறார். அதனால் மகளுக்கு வேறொருவருடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். கோர முகமுடைய ஒரு வாலிபனை மகளுக்கு மணாளனாக தீர்மானிக்கிறார். சதியின் தாய் பிரசுதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அந்த வாலிபனை அழகாக மாற்றுவதற்காக ஜித்தன் என்ற கலை நிபுணரை அரண்மனைக்கு அழைத்து வருகிறார். சிவன் ஜித்தன் ரூபத்தில் வந்து சதியை அந்த திருமணத்தில் இருந்து மீட்கிறார். சிவனை அவள் மணம் புரிந்தபின் தக்ஷராஜன் மேற்கொள்ளும் அதிரடி முயற்சிகள் என்ன என்பதை வரும் வாரங்களில் காணலாம்.