ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
விஜய் டிவியில் இதுவரை மாலை வேளையில் ஒளிபரப்பாகி வந்த சிவம் தொடர், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தத் தொடர், இந்தியிலும் நம்பர் ஒன் தொடராக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தக்ஷராஜனின் மகளான சதி தன்னையும் அறியாமல் சிவனிடம் மனதை பறிகொடுக்கிறாள். தீவிர விஷ்ணு பக்தரான தக்ஷன் தன் மகள் சிவனை விரும்புவதை அறவே வெறுக்கிறார். அதனால் மகளுக்கு வேறொருவருடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். கோர முகமுடைய ஒரு வாலிபனை மகளுக்கு மணாளனாக தீர்மானிக்கிறார். சதியின் தாய் பிரசுதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அந்த வாலிபனை அழகாக மாற்றுவதற்காக ஜித்தன் என்ற கலை நிபுணரை அரண்மனைக்கு அழைத்து வருகிறார். சிவன் ஜித்தன் ரூபத்தில் வந்து சதியை அந்த திருமணத்தில் இருந்து மீட்கிறார். சிவனை அவள் மணம் புரிந்தபின் தக்ஷராஜன் மேற்கொள்ளும் அதிரடி முயற்சிகள் என்ன என்பதை வரும் வாரங்களில் காணலாம்.