மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
உலகம் முழுக்க தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள், டி.வி.க்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் தமிழ் டி.வி. சேனல்கள் மூலம் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாங்காங் நாட்டில் தமிழ் சேனல்களை முற்றிலுமாக தடை செய்ய இருக்கின்றனர். தற்போது அந்நாட்டில் விஜய் டி.வி. மட்டுமே ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சேனலையும் வருகிற ஜன.31ம் தேதி முதல் தடை செய்ய இருக்கிறார்களாம். இதனால் அங்குள்ள தமிழர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து விஜய் டி.வியை ஒளிப்பரப்பு செய்யவும், தொடர்ந்து தமிழ் சேனல்கள் ஒளிப்பரப்பு ஆவதற்கு அங்குள்ள தமிழ் கலாச்சார அமைப்புகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி வருகின்றனர்.