கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
உலகம் முழுக்க தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள், டி.வி.க்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் தமிழ் டி.வி. சேனல்கள் மூலம் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாங்காங் நாட்டில் தமிழ் சேனல்களை முற்றிலுமாக தடை செய்ய இருக்கின்றனர். தற்போது அந்நாட்டில் விஜய் டி.வி. மட்டுமே ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சேனலையும் வருகிற ஜன.31ம் தேதி முதல் தடை செய்ய இருக்கிறார்களாம். இதனால் அங்குள்ள தமிழர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து விஜய் டி.வியை ஒளிப்பரப்பு செய்யவும், தொடர்ந்து தமிழ் சேனல்கள் ஒளிப்பரப்பு ஆவதற்கு அங்குள்ள தமிழ் கலாச்சார அமைப்புகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி வருகின்றனர்.