ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாய் மண்ணே வணக்கம் நிகழ்ச்சி பொங்கல் விடுமுறை நாளில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. கடந்த டிசம்பர் 29ம்தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமான மேடையில் முப்பதாயிரம் பார்வையாளர்கள், 300 தொழில்நுட்பக் கலைஞர்கள், இசை நடனக் கலைஞர்கள் இவர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘தாய் மண்ணே வணக்கம் இசைவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்குழுவினரோடு அமெரிக்காவை சேர்ந்த ஏழு பெண் இசைக் கலைஞர்கள் முதன்முறையாக டிரம்ஸ் வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பல பாடல்களை பாடினார். இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகர்கள் மனோ, ஹரிஹரன், சித்ரா, கார்த்தி ,பென்னி தயால், சின்மயி உள்ளிட்டோர் பாடல்களை பாடினார்கள். பாடல்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமான பல நடனங்களும் நிகழ்த்தப்பட்டது. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஜெயா டிவியில் வருகிற பொங்கல் விடுமுறை தினங்களான ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.