ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாய் மண்ணே வணக்கம் நிகழ்ச்சி பொங்கல் விடுமுறை நாளில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. கடந்த டிசம்பர் 29ம்தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமான மேடையில் முப்பதாயிரம் பார்வையாளர்கள், 300 தொழில்நுட்பக் கலைஞர்கள், இசை நடனக் கலைஞர்கள் இவர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘தாய் மண்ணே வணக்கம் இசைவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்குழுவினரோடு அமெரிக்காவை சேர்ந்த ஏழு பெண் இசைக் கலைஞர்கள் முதன்முறையாக டிரம்ஸ் வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பல பாடல்களை பாடினார். இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகர்கள் மனோ, ஹரிஹரன், சித்ரா, கார்த்தி ,பென்னி தயால், சின்மயி உள்ளிட்டோர் பாடல்களை பாடினார்கள். பாடல்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமான பல நடனங்களும் நிகழ்த்தப்பட்டது. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஜெயா டிவியில் வருகிற பொங்கல் விடுமுறை தினங்களான ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.