மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் டிவி ஹிட் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சமீபத்தில் தொடரின் டிஆர்பியை கூட்டும் வகையில் சமகால பிரச்னையை கையில் எடுத்து பேசுகிறோம் என்ற பெயரில், பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து படமாக்கி வருகின்றனர். இதற்காக பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் அண்மையில் ப்ரணிகா நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலின் காரணமாக அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வது ப்ரோமோவில் காட்டப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், முகமது கோஷ் என்பவர் இது போன்ற காட்சிகளை சீரியலிலிருந்து நீக்க வேண்டும் என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், 'பொதுவாகவே தற்கொலை என்பது தவறான ஒன்று. அதிலும் பள்ளி படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்வது மிக மிக தவறு. எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதை நாம் பிள்ளைகளுக்கு வலியுறுத்தி சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதுபோன்று நடக்கும் பாலியல் கொடுமைகளை பற்றி தைரியமாக பெற்றோர்களிடமும் சொல்லவில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கோம். இந்த சூழலில் பாலியல் தொல்லை காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதாக சீரியலில் காட்டியிருக்கிறார்கள். இது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.