'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜெயா டிவியில் தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தித் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஐயப்ப பக்தன் அழகனுக்கு மல்லிகா, சீதா என 2 மகள்கள். காட்டில் உள்ள ஒரு விசேஷ மூலிகையினால் எல்லோருக்கும் இலவச சிகிச்சை அளிக்கிறான். அழகன். அந்த அபூர்வ மூலிகையின் ரகசியத்தைப் பெற கேசவன் என்பவனும் மந்தாகினி என்ற அவனது தோழியும் சகல விதமான முயற்சிகளையும் செய்கிறார்கள். முதல் கட்டமாக அழகனின் குழந்தைகள் இருவரையும் சித்ரவதை செய்கிறார்கள். வேதனை பொறுக்காத குழந்தைகளின் அழுகுரல் கேட்டு உடனடியாக ஐயப்பன் அவர்களுக்கு உதவினார் என்பது புராணம். தொடரை, ஸ்ரீசுப்பிரமணியம் என்டர்பிரசஸ்சுக்காக எஸ்.கார்த்திகேயன் தயாரிக்கிறார். கதை:சரவணன். வசனம்: கே.பி.அறிவானந்தம். ஹர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். பாலாஜி, சஞ்சய், மீனாகுமாரி, கே.ஆர்.விஜயா, டில்லி கணேஷ், பிரவினா, ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் உண்டு. டைரக்டர் துளசிதாஸ் இயக்குகிறார்.