அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் முக்கிய இடத்தை பிடித்த சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து முழுக்கு போடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார்.
சமந்தா திருமணம் செய்து நேற்றோடு நான்காண்டுகளாகிறது. ஆனால் இந்த திருமணநாளில் அவர் கணவருடன் இல்லை. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதில் ஒரு போட்டோவை பகிர்ந்து, ”பழைய காதலின் பாடல்கள் - மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம், தொலைந்து மீட்டெடுக்கப்பட்ட படங்களின் பாடல்கள். பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதுவொரு பேஷன் ஷோ-வுக்காக போடப்பட்ட பதிவு என்கிறார்கள்..
கடந்த ஆண்டு இதே நாளில், ”நீ எனக்கானவன் நான் உனக்கானவள், எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக திறப்போம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்” என நாகசைதன்யாவுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.