ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
படத்தின் வெற்றி, தோல்வியை பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா, கவுதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய ரோலில் தோன்றினார். பின்னர் தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயாவில் ஹீரோயினாகவே நடித்தார். கடல், ஐ போன்ற தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும், சில பிரச்னைகளால் நடிக்க முடியாமல் போன சமந்தா, தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் பெரும்பாலும் கவுதம் இப்படத்தை சொதப்பி விட்டார் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற சமந்தா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர், நான் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். சில பிரச்னைகளால் 2012ம் ஆண்டில் பல பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் 2013ம் ஆண்டு நிறைய படங்களில் நடிப்பேன். நீதானே என் பொன்வசந்தம் படத்தில் வந்த நித்யா கேரக்டர் எனக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டது. எனென்றால் படத்தில் வந்த அநேக காட்சிகள் எனது வாழ்க்கையிலும் நடந்தது போன்றே இருந்தது. அப்படின்னா நீங்களும் காதலித்தீர்களா என்று கேட்டபோது, கல்லூரியில் நான் படிக்கும்போது எனக்கு காதல் அனுபவம் ஏற்பட்டது என்றார்.