ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களுக்கெல்லாம் போதாத காலம் போலிருக்கிறது. அவர்கள் நடித்த படங்கள் வந்த வேகத்திலேயே தியேட்டரைவிட்டு ஓட்டம் பிடித்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், அஜீத்தின் பில்லா-2, விக்ரமின் தாண்டவம், ஜீவாவின் முகமூடி, கார்த்தியின் சகுனி, சூர்யா நடித்த மாற்றான் என்று பல படங்கள் இடம்பிடித்தன. இதில் விஜய்யின் துப்பாக்கி மட்டுமே தப்பித்தது. அதன்காரணமாக தோல்வியை சந்தித்த ஹீரோக்கள் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து மார்க்கெட்டை சரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இதில் கார்த்தி புது மாதிரியான யுக்தியை கையாளத் தொடங்கியிருக்கிறார். இதற்கு முன்பு தான் நடித்த சில படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, தன்னை அண்ணன் சூர்யாவோடு சேர்த்து எம்ஜிஆர், சிவாஜி ரேஞ்சுக்கெல்லாம் சிலர் மேடைகளில் பில்டப் கொடுத்ததுதான் தனது சரிவுக்கு காரணம் என்று கருதுகிறார். அதன்காரணமாக தனது படங்களை அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் பார்க்க வருகிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததில் சிறிது குறை இருந்தாலும் படம் சரியில்லை என்று சர்டிபிகேட் கொடுத்து விடுகிறார்கள். அதனால் இனி தன்னைப்பற்றி யார் தேவையில்லாத பிmfடப் கொடுத்தாலும் அதற்கு அவர் அனுமதிக்கப்போவதில்லையாம். அதோடு, தனது படங்கள் ரிலீசாவதற்கு முன்பு அதைப்பற்றி தேவையில்லாத பில்டப் செய்திகளையும் வெளியிட வேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட கம்பெனிகளிடம் கேட்டுக்கொண்டு வருகிறார் கார்த்தி. அப்படி தற்போது கார்த்தி நடித்துள்ள அலெக்ஸ் பாண்டியன் படம் எந்தவித அதிரடியான பப்ளிசிட்டிகளும் இல்லாமல், சாதாரணமாக தற்போது திரைக்கு வரத்தயாராகிக்கொண்டிருக்கிறது.