மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கே.வி.ஆனந்த் இயக்கிய கனாக் கண்டேன், அயன், கோ படங்களின் கதை வசனகர்த்தாக்களாக இருந்தவர்கள் எழுத்தாளர்கள் சுபா. கதை விவாதம், திரைக்கதை அமைப்பு என அனைத்திலும் கே.வி.ஆனந்த்க்கு உதவி வந்தார்கள். ஆனால் இவர்கள் இணைந்து பணியாற்றிய மாற்றான் படம் தோல்வி அடைந்து விட்டது. இதற்கு எழுத்தாளர்களின் தவறான ஆலோசனைதான் என்று கே.வி.ஆனந்த் கருதுகிறாராம். இதனால் ஏழுத்தாளர் சுபாவை தன் குழுவிலிருந்து விலக்கி விட்டாராம். தற்போது கே.வி.ஆனந்த்க்காக ரஜினிக்காக ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறாராம். இதன் கதை விவாதத்திலும், ஆலோசனையிலும் சுபா இல்லை. அவர்களுக்கு பதிலாக அந்த டீமில் இப்போது பட்டுக்கோட்டை பிரபாகர் காணப்படுகிறார். "ரஜினிக்காக தயாராகி வரும் ஸ்கிரிப்ட் சூப்பர் போலீஸ் ஆக்ஷன் ஸ்டோரி. உலகையே உலுக்கும் ஒரு க்ரைம் சென்னையில் நடக்கிறது. அதை கண்டுபிடிக்க வரும் இண்டர்போல் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் நடிக்கிறார். அதனால்தான் க்ரைம் நாவல்களுக்கு புகழ் பெற்ற பட்டுக்கோட்டை பிரபாகரை இயக்குனர் விவாதத்திற்கு அழைத்துள்ளார். மற்றபடி சுபா எங்கள் அணியில்தான் இருக்கிறார்" என்கிறார்கள். கே.வி.ஆனந்தின் நண்பர்கள்.