டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்நாட்டில் பஸ் நிலையங்களிலேயே வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அங்கேயே படுத்து தூங்கி அங்குள்ள குளியலறை, கழிப்பிடங்களை பயன்படுத்தி, அங்கேயே பிழைப்பையும் பார்த்துக் கொள்வார்கள். இவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது "பெண் ஒன்று கண்டேன்". தலைப்பிலேயே படத்தின் கதையையும் காணமுடியும். பஸ் நிலையத்தில் வாழும் ஒரு இளைஞன் அங்கு வரும் ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொள்கிறான். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. ஜெ.வி.அஸ்வின்ராஜ், அனாமிகா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பெரும்பாலான கதை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நடந்தாலும், தமிழ் நாட்டில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் படம்பிடித்திருக்கிறார்கள். பிரபு தேவாவின் உதவியாளர் சஞ்சீவ் சீனிவாசன் இயக்கி உள்ளார்.