அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட சமந்தா-நாகசைதன்யா நட்சத்திர தம்பதியினர் நேற்று தாங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக கூட்டாக அறிவித்தனர். இந்த செய்தி தமிழ், தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த பிரிவிற்கான காரணத்தை அவர்கள் இருவருமே தெரிவிக்கவில்லை. அதோடு கடந்த மூன்று மாதங்களாகவே நாகசைதன்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் சமந்தா, தொடர்ந்து சினிமாவில் தான் கவனம் செலுத்தும் நோக்கில் சினிமா, வெப் சீரிஸ் என்று நடிப்பில் கவனத்தை திருப்பியுள்ளார். அதோடு, நாகசைதன்யாவை பிரிவது என்பது பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு என்பதால் நேற்று இந்த செய்தியை வெளியிட்டது சமந்தாவிற்கு பெரிதாக மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதால் தொடர்ந்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், நாகசைதன்யாவை விவாகரத்து செய்ய தயாராகிவிட்ட சமந்தாவிற்கு அவரது சார்பில் ரூ.200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்ததாகவும் அதை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு நான் சினிமாவில் தனித்து வந்து போராடி வெற்றி பெற்றவள். அதனால் என்னால் சுயமாக சம்பாதித்து வாழ முடியும் என்று அவர் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.