மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
நீண்ட ஆலோசனைக்கு பிறகு கணவன், மனைவியாக உள்ள நாங்கள் பிரிகிறோம் என நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் அறிவித்துள்ளனர்.
சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். நான்கு வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் பிரிய போவதாக செய்திகள் பரவின. இதற்கு ஆரம்ப புள்ளியாக திருமணத்திற்கு பின் சமூகவலைதளத்தில் தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிய சமந்தா சில வாரங்களுக்கு முன் ‛எஸ் என்று மட்டும் மாற்றினார். அப்போதே இவர்கள் பிரிவதாக பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து சமந்தா தனித்து சுற்றுலா சென்றது, நாகசைதன்யா பட விழாவில் பங்கேற்காதது, அவருக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் சாய் பல்லவிக்கு வாழ்த்து தெரிவித்தது, ஹிந்தி நடிகர் அமீர்கானுக்கு நாகர்ஜூனா வைத்த விருந்தில் பங்கேற்காதது என அடுத்தடுத்த நிகழ்வுகள் இவர்கள் பிரிவதை உறுதி செய்வதாகவே அமைந்தது. ஆனால் இதுப்பற்றி நேரடியாக இருவரும் எதுவும் கருத்து கூறாமல் இருந்தனர்.
இந்நிலையில் சமந்தா, நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிவதாக ஒரே மாதிரியான பதிவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அதில், ‛‛நீண்ட ஆலோசனைக்குக்குப் பிறகு கணவன் மனைவியாக உள்ள நானும் சமந்தாவும், (நானும், நாகசைதன்யாவும்) பிரிந்து தனித்து செல்ல முடிவு செய்துள்ளோம். 10 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள், நலம் விரும்பிகள், பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் எங்களின் தனிப்பட்ட விஷயத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு இருவரும் பதிவிட்டுள்ளனர்.