டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நளனும் நந்தினியும் படத்திற்காக பாவாடை தாவணியில் மதுரையை சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார் அட்டக்கத்தி நந்திதா. மதுரை அவுட்டோரில் உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவில் "கும்முன்னு வருது... நம்ம ஊரு தேரு... தேருமேல வருகிற தேவதைய பாரு..." என்ற பாடலுக்கு ஹீரோ மைக்கேலுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவரைப் பிடித்து "என்னங்க தமிழ்நாட்டு பொண்ணாவே மாறிட்டீங்க போல..." என்றால் தெத்துப்பல் தெரிய கலகலவென சிரிக்கிறார்.
"பெங்களூருக்கும் சென்னைக்கும் 8 மணிநேர டிராவல்தான். தமிழ் நல்லா பேசுவேன். பாவாடை தாவணி அம்சா ஷூட்டாகுது. அப்போ நான் தமிழ் பொண்ணுதானே. அட்டகத்தியில என்னை அழகுபடுத்தி பார்த்தீங்க. இப்போ நந்தினியா பார்க்கப்போறீங்க. மார்டன் பொண்ணாவே வாழ்துட்டோமே இப்படி ஒரு அழகான வாழ்க்கை இருக்குங்றத மதுரைக்கு வந்த பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன். எந்த கிராமத்துக்கு போனாலும் திருஷ்டி சுத்தி இந்த தெத்துப்பல்லுதாம்மா உனக்கு அழகுன்னு சொல்றப்போ நெகிழ்ச்சியா இருக்கு. தமிழ் சினிமால நம்பர் ஒன் ஹீரோயின். கனவு கன்னியெல்லாம் ஆக வேணாம். உங்களோட பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருந்தா போதுங்க" என்று சிரித்து வழியனுப்பிய படி அடுத்து ஷாட்டுக்கு எழுந்து போனார்.