டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மைனா அமலாபாலின் நடிப்பு பேசப்படும் அளவுக்கு இதுவரை அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நார்மலான நடிகையாகத்தான் நடித்து வந்திருக்கிறார். ஆனால் மலையாளத்தில் பிருதிவிராஜூடன் அவர் நடித்த கலர் ஆப் ஸ்கை என்ற படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மனதளவில் உற்சாகமடைந்துள்ள அமலாபால், தன்னாலும் விருதுகள் வாங்கும் அளவுக்கு நடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார். அதன்காரணமாக, இதுவரை கமர்சியல் கதைகளாக நடித்து வந்த அவர், இனி அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு முதலிடம் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்.
குறிப்பாக பருத்தி வீரன் படத்தில் ப்ரியாமணி நடித்தது போன்ற வேடங்கள் கிடைத்தாலும் தைரியமாக நடிப்பாராம். இதுவரை சினிமாவில் ஒரு நடிகையாக என்னை நிலைநிறுத்தும் முயற்சியில் இருந்தேன். இப்போது அதற்கான பலன் கிடைத்து விட்டது. ஆனால் அடுத்து என்னை உலகுக்கு அடையாளம் காட்டக்கூடிய கதைகளாக தேர்வு செய்யப்போகிறேன். அப்படி கிடைக்கும் படங்களில் உடல் ஊனமுற்றவராக அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ எந்த மாதிரியான வேடம் என்றாலும் நடிப்பேன். கதாநாயகி என்ற வட்டத்தில் இருந்து விடுபட்டு, கதை கதாபாத்திரத்திற்கேற்ப மாறி நடிக்கும் நல்ல நடிகையாக என்னை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளப்போகிறேன் என்கிறார் அமலாபால்.