Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சொந்த ஊர்க்காரர்களையே டீலில் விட்ட சினிமா கவிஞர்!

18 டிச, 2012 - 12:13 IST
எழுத்தின் அளவு:

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிழக்கு பாத்த வீடு. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை இவர்கள் இயக்கும் முன்பாக, மதுரை வட்டாரத்தைச்சேர்ந்த இப்படத்தின் தயாரிப்பாளர், தங்கள் பகுதியைச்சேர்ந்த அந்த வைரம் பாய்ந்த அந்த பிரபல கவிஞரை சந்தித்து படமெடுப்பது பற்றி சொன்னாராம். அப்போது, நீங்கள் படத்திலுள்ள மொத்த பாடல்களையும் எனக்கு எழுத சான்ஸ் கொடுத்தால், உங்கள் படத்தின் வியாபாரத்துக்கு நான் கேரண்டி என்று சொன்னாராம். விநியோகஸ்தர்களிடம் பேசுவேன், பெரிய டி.வியில் விற்று கொடுப்பேன் என்றெல்லாம் ஏகத்துக்கு எடுத்து விட்டாராம்.

அதில் மயங்கிய தயாரிப்பாளர், புதுமுகங்களை வைத்து இயக்கும் படம் என்றுகூட நினைக்காமல் பல கோடிகளை செலவு பண்ணி படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் படப்பிடிப்பை முடித்து விட்டு, படம் பார்க்க சம்பந்தப்பட்ட கவிஞரை அழைத்தபோது, படத்தை பார்த்து விட்டு சென்றவர்தானாம். அதையடுத்து படத்தின் வியாபாரம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம். இதனால் தடுமாறிக்கொண்டு நிற்கிறார் புது படாதிபதி. விநியோகஸ்தர்களும் கைவிட்ட நிலையில், இப்போது சொந்தமாக படத்தை வெளியிட்டாவது போட்ட பணத்தை கைப்பற்றலாமா? என்று ரிஸ்க் எடுக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, அந்த கவிஞரை நம்பி சினிமாவில் இறங்கி இப்படி வகையாக மாட்டிக்கொண்டேன் என்று சந்திப்பவர்களிடம் புலம்பித்தள்ளி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

JAIRAJ - chennai ,இந்தியா
16 ஜன, 2013 - 03:34 Report Abuse
 JAIRAJ மண் குதிரையை நம்பினால் இப்படிதான் ஆகும். உன் திறமையின் மீதும்,கதையின் மீதும் நம்பிக்கை இருந்தால், நீயே சுயமாக வெளியிடு. அப்படி என்ன தத்துவப்பாடல் நிகழ் கால கதைக்குத் தேவை. " மூலையில் மூடிவை பானையை பாளையில் பதுக்கிவை பதனியை " என்று எழுத யாராக இருந்தால் என்ன ?
Rate this:
ரெட் ரோஸ் - kuwait,குவைத்
18 டிச, 2012 - 16:43 Report Abuse
 ரெட் ரோஸ் எனக்கும் வைரமுத்துவைப்பற்றி நல்ல கருத்து இல்லை, ஏன் என்றால் அவரிடம் எப்பொழுதும் ஒரு கர்வத்துடன் கூடிய ஒரு அஹம்பாவத்தை காண முடிகிறது. இது அவருக்கு நல்லது இல்லை. கபிலன் மற்றும் கார்கி அறிஉரை சொன்னால் நல்லது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in