விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு |
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிழக்கு பாத்த வீடு. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை இவர்கள் இயக்கும் முன்பாக, மதுரை வட்டாரத்தைச்சேர்ந்த இப்படத்தின் தயாரிப்பாளர், தங்கள் பகுதியைச்சேர்ந்த அந்த வைரம் பாய்ந்த அந்த பிரபல கவிஞரை சந்தித்து படமெடுப்பது பற்றி சொன்னாராம். அப்போது, நீங்கள் படத்திலுள்ள மொத்த பாடல்களையும் எனக்கு எழுத சான்ஸ் கொடுத்தால், உங்கள் படத்தின் வியாபாரத்துக்கு நான் கேரண்டி என்று சொன்னாராம். விநியோகஸ்தர்களிடம் பேசுவேன், பெரிய டி.வியில் விற்று கொடுப்பேன் என்றெல்லாம் ஏகத்துக்கு எடுத்து விட்டாராம்.
அதில் மயங்கிய தயாரிப்பாளர், புதுமுகங்களை வைத்து இயக்கும் படம் என்றுகூட நினைக்காமல் பல கோடிகளை செலவு பண்ணி படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் படப்பிடிப்பை முடித்து விட்டு, படம் பார்க்க சம்பந்தப்பட்ட கவிஞரை அழைத்தபோது, படத்தை பார்த்து விட்டு சென்றவர்தானாம். அதையடுத்து படத்தின் வியாபாரம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம். இதனால் தடுமாறிக்கொண்டு நிற்கிறார் புது படாதிபதி. விநியோகஸ்தர்களும் கைவிட்ட நிலையில், இப்போது சொந்தமாக படத்தை வெளியிட்டாவது போட்ட பணத்தை கைப்பற்றலாமா? என்று ரிஸ்க் எடுக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, அந்த கவிஞரை நம்பி சினிமாவில் இறங்கி இப்படி வகையாக மாட்டிக்கொண்டேன் என்று சந்திப்பவர்களிடம் புலம்பித்தள்ளி வருகிறார்.