பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தொடர்ந்து சர்ச்சையில் பூ நடிகை சிக்கி வருவது அவரது சுந்தரமான கணவருக்குப் பிடிக்க வில்லையாம். பெண் குழந்தைகள் பெரியவர்களாகிவிட்ட நிலையில் அவர் தன் ஆர்ப்பாட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பூ நடிகை அரசியலில் நுழைந்ததே கணவரின் விருப்பத்துக்கு மாறாக நடந்ததுதானாம். திருமணத்துக்கு முன்பே ஒருவரின் செயல்பாட்டில் இன்னொருவர் தலையிடக்கூடாது என்று எழுதப்படாத ஒப்பந்தம் போட்டிருப்பதால் கணவர் மவுனமாக இருக்கிறாராம். இதற்கிடையில் சுந்தரமான கணவருக்கும் அங்காடி தெருவில் வேலை செய்த கலகலப்பான நடிகைக்கும் நெருக்கம் அதிகம் என்ற செய்தி வந்தபோது கடுமையாக கத்தினாராம் பூ நடிகை. இப்படியாக பூவும், பூவுக்கு பூவை சூடியவரும் விரிசல்களால் பிரிந்து நிற்கிறார்களாம். விஷயம் எப்போது வெளியில் வரும் என்றுதான் தெரியவில்லை.