இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி படங்களை இயக்கிய அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு லயன் என்ற தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் லயன் படத்தின் கதை உலக புகழ்பெற்ற வெப் சீரிசான மணி ஹீஸ்டின் தழுவல் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஷாருக்கானை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கருதிய அட்லி, தொடர்ந்து அவரை துரத்தி துரத்தி சந்தித்து வந்தார். அட்லி சொன்ன எதை எதுவும் பிடிக்காத ஷாருக்கான் மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ் மாதிரி ஒரு கதை பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து மணி ஹீஸ்ட் சாயலில் அட்லி உருவாக்கிய கதைதான் லயன் என்கிறார்கள். ஒரு பெரிய வங்கி கொள்ளை, அந்த கொள்ளையை வெளியில் இருந்து இயக்கும் அதன் கேப்டன். இந்த ஒன் லைனை வைத்து அட்லி கதையை எழுதியிருக்கிறார். இந்த கதைதான் இப்போது படமாகி வருவதாக கூறப்படுகிறது.
இதில் ஷாருக்கான கொள்ளை அணியின் கேப்டனாக அதாவது மணி ஹீஸ்ட்டில் வரும் புரபசர் மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார், நயன்தாரா போலீஸ் அதிகாரி. இந்த கதை தற்போது கசிந்து பாலிவுட்டில் பரபரப்பாகி இருக்கிறது. பின்னால் பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் ஷாருக்கான் மணி ஹீஸ்ட்டின் உரிமத்தை முறைப்படி பெற்று வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அட்லி இயக்கிய படங்கள் அனைத்தும் பிரபல ஒரு படத்தின் தழுவலாகவே இருப்பது வழக்கமான ஒன்றுதான்.