இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குனர் ஷங்கராகட்டும் அல்லது ராஜமவுலி ஆகட்டும் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு புதிய படத்தையும் தங்களது முந்தைய படங்களின் பட்ஜெட்டை விட அதிகமான செலவில் இன்னும் பிரமாண்டமாகவே எடுத்து வருகின்றனர். ஷங்கர் கூட முதல் படத்தில் இருந்தே பிரம்மாண்டம் காட்டி வருகிறார். ஆனால் ராஜமவுலியோ இடையில் மரியாத ராமண்ணா என்கிற பட்ஜெட் படத்தை ஒரு காமெடி நடிகரை ஹீரோவாக வைத்து இயக்கினார்.
இந்தநிலையில் தற்போது தான் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர் படத்தை முடித்துவிட்டு, அடுத்தததாக மரியாத ராமண்ணா படம் போல சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கப்போகிறாராம் ராஜமவுலி. ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் கடந்து நடைபெற்று வருவதாலும், இடையில் கொரோனா தாக்கமும் சேர்ந்துகொண்டு படப்பிடிப்பை தாமதப்படுத்தி விட்டதாலும் இந்த முடிவை எடுத்துள்ளாராம் ராஜமவுலி.
இதன்படி தனது அடுத்த படத்தை ஒருமாதம் படப்பிடிப்பு, இரண்டு மாதம் போஸ்ட் புரொடக்சன் என வெறும் மூன்றே மாதங்களில் முடித்து ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.